தொடருந்து நிலையத்தை முடக்கிய கொவிட்

339 0

வடக்கு தொடருந்து மார்க்கத்தில், குருநாகல் – கனேவத்தை தொடருந்து நிலையத்தில், இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு தொடருந்தும் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து கட்டுப்பாட்டு மையம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கனேவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள 5 கிராமங்கள், கொவிட்-19 பரவலினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.