பாராளுமன்ற சம்பவம் குறித்து விசாரணை செய்ய குழு நியமனம்

235 0

ஏப்ரல் 21 ம் திகதி பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் பொறுப்பு இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்தார்.

குழுவில் நியமிக்கப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்
பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்