யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் துணைக் கொத்தணிகள்! புதுடில்லியாக மாறும் கொழும்பு! அதிகாரிகள் எச்சரிக்கை

248 0

 தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த துணைக் கொத்தணிகள் குருநாகல், நாரம்பல, அல்லவா, கம்பஹா, கொழும்பு, புத்தளம், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தோன்றியுள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் பிலியந்தலை, மகரகம, மற்றும் பமுனுவ பகுதிகளிலிருந்து துணைக் கொத்துகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் துணைக் கொத்துகள் தோன்றியதாக கூறினார்.

ஆடைத் துறையிலிருந்து துணைக் கொத்துகளும் பதிவாகியுள்ளன, பாதிக்கப்பட்ட நபர்கள் ஏற்கனவே ஒரு சில தொழிற்சாலைகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.

ராகமையில் உள்ள படுவத்தை பகுதியைச் சேர்ந்த 12 பேருக்கும், திவுலபிட்டியைச் சேர்ந்த 26 நபர்களுக்கும் நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய கூட்டாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மஹரகமையில் உள்ள பமுனுவா ஆடையகத்தில் இரண்டு கடைகள் மூடப்பட்டன. அங்கு இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுமார் 22 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சுகாதார அமைச்சகம் ஒரு நாளைக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளை 15, 000 சோதனைகளாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், மீண்டும் ஒரு ஆபத்தான இடமாக கொழும்பு மாறுவதுடன், புதுடெல்லியின் நிலை போன்ற பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.

இது ஒரு முன் எச்சரிக்கை மட்டுமே என்றும், வரவிருக்கும் மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும், சுகாதார வழிகாட்டுதல்களை மிக முன்னுரிமையுடன் பராமரிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.