தமிழக கடற்றொழிலாளர்கள் 16 பேர் இன்று காலை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 3 படகுகளில் தொழிலுக்கு சென்ற இராமநாதபுரம் கடற்றொழிலாளர்கள் 16 பேரை, நெடுந்தீவு மற்றும் மன்னார் பகுதிகளில் வைத்து இலங்கை கடற்படையினர், கைது செய்துள்ளனர்.
எல்லைதாண்டி தொழிலில் பிடித்ததாகக் கூறியே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஐந்துபேர் நெடுந்தீவிலும் 11 பேர் மன்னாரிலும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் மன்னாரில் கைதுசெய்யப்பட்டவர்களில் 10பேர் ஜூலை 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் சிறுவன் என்பதால் அவர் சிறுவர் நன்னடத்தை பிரிவில் கையளிக்கப்பட்டார். நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட ஐந்துபேரும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூலை 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் கடந்த வாரம் பருத்தித்துறை கடலில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஐந்து ஐந்துபேரின் விளக்கமறியல் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தினால், ஜூலை 20ஆம் திகதிவரையில் நீடிக்கப்பட்டது. இதேவேளை கடந்த ஜூலை 3 திகதி முதல் இன்றுவரை 44 தமிழக கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025