அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டார்

294 0

download-2வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்திய வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளரின் வெற்றிடத்திற்கு, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஆண்டியப்பு புவனேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட ஆண்டியப்பு புவனேஸ்வரன் இன்று இன்று பிற்பகல் 03 மணிக்கு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.ஆண்டியப்பு புவனேஸ்வரன் தமிழ்தேசியக் கூட்டமைப்பில், தமிழீழ விடுதலை இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது