சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது

290 0

downloadகொழும்பு பம்பலபிட்டி – ஆனர் மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலபிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது வெட்டப்பட்ட 15 ஆடுகளும், வெட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த 12 ஆடுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 37 முதல் 46 வயது மதிக்கத்தக்கவர்கள் என பம்பலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.