மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம்

309 0

mathakal-body-02-19-12-2016யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

முகம் மற்றும் கால்கள் சிதைவடைந்த நிலையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலத்திற்கு அருகில் ஊன்றுகோல் ஒன்று காணப்படுவதாகவும், குறித்த இளைஞர் 25 இலிருந்து 30 வயதிற்கிடைப்பட்டவராக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 021 221 1922 என்ற இளவாலை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறும் இளவாலைப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

mathakal-body-02-19-12-2016 mathakal-body-01-19-12-2016