யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று

372 0

யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களில் ஒருவர் மருதனார்மடம் சந்தை வியாபாரி எனத் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 756 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போதே 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 321 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரில் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் ஒருவர் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியைச் சேர்ந்தவர். ஏனைய 3 பேரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஒருவர் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரி. மற்றையவர் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இவர்களில் மூவர் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்படவர்கள். மேலும் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.