மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் காலமானார்

419 0

மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வந்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை, (80 வயது) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை, அவர் உயிரிழந்ததாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்  குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் தொடர்பாக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை குறிப்பிட்டுள்ளார்.