நன்றி தெரிவித்த கப்பல் நிறுவனம்

259 0

shipஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதுஆர்ப்பாட்டக்காரர்களினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த கப்பலை பாதுகாப்பான முறையில்மீட்டெடுத்தமைக்கு குறித்த கப்பல் நிறுவனம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை தளபதி மற்றும் இலங்கை கடற்படைக்கு கே லைன்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ளகடிதத்திலேயே இந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கடற்படையின் இந்த நடவடிக்கையின் ஊடாக இலங்கையின் நற்பெயர் சர்வதேச ரீதியில்பாதுகாக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.தம்மை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி கடந்த 10ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள்பாரிய போராட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் இரண்டு கப்பல்கள் சுற்றி வளைக்கப்பட்டு தமதுபொறுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கப்பல்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களின்பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கடற்படையினரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.