ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை அரச மற்றும் தனியார் இணைந்து நடாத்தி செல்லும் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் மாகம்புர துறைமுகம் புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்கவுள்ளது.இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.