வடக்கில் மேலும் நால்வருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

308 0

வடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.


இதில் யாழ்ப்பாணத்தில் மூவரும், மன்னாரில் ஒருவரும் கொரோனா நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 294 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போதே நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.