சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக 6 மணி நேர நீர்வெட்டு

250 0

சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக இன்று (23) காலை 9 மணி முதல் 6 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பேலியகொட, வத்தள, ஜாஎல, கட்டுநாயக்க/சீதுவ ஆகிய நகர சபை பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களனி, வத்தள, பியகம, மஹர, ஜாஎல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.