ஜெனிவா முருகதாசன் திடலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் .

470 0

இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் பல சகாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் தமிழின அழிப்பினை ஆராய்ந்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை நடாத்தி தமிழர்களுக்கான நீதியை அனைத்துலச் சமூகம் பெற்றுக்கொடுக்கவும்.

தாயகத்திலும் புலத்திலும் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டங்களுக்கு வலுசேர்க்கவும்
தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐ.நா அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படுவதோடு ,புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐ.நா அவை ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்ப்பாட்டில் இன்று (22.03.2021) திங்கள் பிற்பகல் 14:30 மணி UNO Geneva, ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்.