மஸ்கெலியா கோவிலில் கொவிட் கொத்தணி!

351 0
மஸ்கெலியா ஶ்ரீ சண்முகநாதன் கோவிலுடன் தொடர்புடைய 11 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த கோவிலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் கடந்த தினம் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கோவில் பூசகருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருடன் நெருங்கிப் பழகிய 35 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த 11 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.