யாழில் கொரோனா தொற்றினால் 63 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழப்பு

323 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறலையடுத்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகியதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபப் பெண் என்றும் அவருக்கு மருத்துவ சேவை வழங்கிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தபட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.