காவல்துறை அதிகாரியை கூரிய ஆயுதத்தால் தாக்கி தப்பியோடிய நபர் கைது

267 0

கிருலப்பனை – நாகஸ்வத்தையில் காவல்துறை அதிகாரியை ஆயுதத்தால் தாக்கி தப்பிச்சென்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

கிருலப்பனை காவல்துறையின் மூன்று அதிகாரிகள் குறித்த சந்தேகநபரை கைது செய்ய முயற்சித்த சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தின் பின்னர் அங்கிருந்து தப்பி சென்றிருந்த சந்தேகநபர் காவல்துறையினரால் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்