ஓட்டமாவடியில் போலி நாணையத்தாள்களுடன் ஒருவர் கைது!

306 0

மட்டக்களப்பு  ஓட்டமாவடியில் கடை ஒன்றில் போலி 5 ஆயிரம் ரூபா கொண்ட 20 நாணையத்தாள்களை வைத்திருந்த ஒருவரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதுடன் நாணையத்தாள்களையும் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை  பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிளையடுத்து சம்பவதினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விசேட அதிரடிப்படையினர் குறித்த சப்பாத்து விற்பனை செய்யும் கடை ஒன்றினை சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த கடையில் கடமையாற்றும் ஒருவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா கொண்ட 2 இலச்சம் ரூபா 20 போலி நாணையத்தாள்களை மீட்டதுடன் அவரை கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவரை இன்று (திங்கட்கிழமை) வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்