சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே முன்னுரிமை!

249 0

சீன கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும்போது இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே  குறிப்பிட்டுள்ளார்.

சீன அரசாங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது இலங்கை சீனாவிலிருந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காகவே சீன அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையிலுள்ள சீன பிரஜைகளின் எண்ணிக்கை குறித்தும் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.