உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது- மட்டக்களப்பில் சம்பவம்

313 0

மட்டக்களப்பு- வவுணதீவு, காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கியினை வைத்திருந்த விவசாயி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 42 வயதான விவசாயி ஒருவரையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், காந்திநகர் பகுதியிலுள்ள விவசாயின் வீட்டினைச் சுற்றி திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த மரங்களுக்கு கீழே, பொலித்தீனால் சுற்றி ஒளித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.