Facebook களியாட்டம் – மூவர் கைது

268 0
மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்டம் ஒன்றை சுற்றிவளைத்த சந்தர்பத்தில் வௌிநாட்டு மதுபானம் 57,250 லீற்றருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த களியாட்ட நிகழ்வில் சுமார் நூறுக்கு அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.