தொங்கிய​ நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

266 0

தம்பலகாமம் பாலம் போட்டாறு பத்தினிபுரப் பகுதியிலுள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையொன்றில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (21) கைப்பற்றப்பட்டுள்ளது என,  தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் நல்லூர், எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ப​வரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஆடு மேய்ப்பதற்காக குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் அப் வாழ்ந்து வந்துள்ளார்.

அந்தப்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளாரா அல்லது படுகொலைச் செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார், அரைப்பகுதி உடம்பு தொடங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.