கணவன் பணம் அனுப்பாத விரக்தியில் பச்சிளங் குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்.

281 0

யாழில் 9 மாதக் குழந்தையை துன்புறுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட 24 வயது தாய் பொலிஸாரிடத்தில் வழங்கிய பகீர் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் – அரியாலை, நாவலடி பிரதேசத்தில் குழந்தையை துன்புறுத்திய தாயாரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூகவலைத்தளங்களில் பலரும் சம்பவம் தொடர்பில் கண்டனங்களை தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட தாய் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து விசாரணையின்போது கடந்த மாதம் குழந்தையுடன் இவர் குவைட் நாட்டிலிருந்து நாடு திரும்பியிருக்கின்றார்.

தனது கணவருடன் இருந்த அவர் பிள்ளையை அழைத்து நாடு திரும்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் செலவிற்கு கணவர் பணம் அனுப்பாத விரக்தியில் தான் இருந்ததாக குறித்த பெண் பொலிஸாரிடத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.