புதுக்குடியிருப்பு பொலீஸாரும் P2P தொடர்பில் கஜேந்திரன் எம்.பியிடம் வாக்குமூலம்!

282 0

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் இன்றையதினமும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனிடம் புதுக்குடியிருப்பு பொலீஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச்செயலகத்தில் வைத்து புதுக்குடியிருப்பு பொலீஸாரினால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் ஒட்டுசுட்டான் பொலீஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.