சிதைந்த சடலத்தை அடையாளம் காண பொதுமக்கள் தகவல் வழங்கலாம்:

234 0

கொழும்பு டாம் வீதிப் பகுதியில் பயணப்பை ஒன்றிலிருந்து 20 வயதுப் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

பலியான பெண்ணின் அடையாளம் உறுதி செய்யப்படும் வரை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என நீதிவான் உத்தரவிட்டதாக டாம் வீதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.


சிதைந்த உடலை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதால் உடலை 14 நாட்கள் வைத்திருக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை சடலத்தின் மீதான பிரேதப் பரிசோதனை இன்று மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

சந்தேக நபர் ஹன்வெல்ல -புறக்கோட்டை பேருந்தில் பயணித்துள்ளதாக நம்பப்படுவதுடன் குறித்த பேருந்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண கூறினார்.

சந்தேக நபர் பயணப்பை பையைக் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் டாம் வீதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 0718 591 557 அல்லது 0112 433 333 ஹொட்லைன் எண்களில் அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.