தற்கொலை குண்டுதாரியின் தந்தைக்கு விளக்கமறியல் உத்தரவு

257 0

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரியின் தந்தை அஹமது லெப்பே அலாவுதீனை எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

குறித்த நபர் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத் தப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அறிவித்தனர்.

உண்மைகளை ஆராய்ந்த பின் சந்தேக நபரை மார்ச் 16 வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.