இராணுவ சிப்பாய் பேருந்து விபத்து சம்பவம் : சாரதி கைது

296 0

புகையிரத கடவையில் எச்சரிக்கை சமிஞ்சை மீறி இராணுவ சிப்பாய்களை ஏற்றிச்சென்ற பேருந்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக மோட்டார் வாகன சட்டவிதிகள் மற்றும் குற்றவியல் சட்டவிதிகளுக்கு கிழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

வனவாசல பகுதியில் நேற்று புகையிரதத்தின் வருகையை குறிக்கும் வகையில் சமிஞ்சை விளக்கு ஒளிர்ந்த போதும் அதனை பொருட்படுத்தாத சாரதியொருவர் பேருந்தை செலுத்தியதில் அது புகையிரதத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது இந்த பகுதியிலிருந்த இருவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.