சீனாவுக்கு நிலங்களை வழங்க வேண்டாம் – இடதுசாரியினர் கோரிக்கை

268 0

nilam_2341317fஹம்பாந்தோட்டை துறைமகத்தை அண்மித்ததாக அமைந்துள்ள 15 அயிரம் ஏக்கர் நிலப்பகுதி சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை நிறுத்துமாறு இடதுசாரி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய, அந்த அமைப்பின் இணைப்பாளர் ஷமீர பெரேரா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதனிடையே, மாஹம்புர துறைமுகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர் ஒருவரை முறையற்ற  வகையில் தூற்றிய சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விரைவில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.