கோலாலம்பூர் வர்த்தக மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி

258 0

thumb_large_asdfs2மலேஷிய சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோலாலம்பூரில் இன்று இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதில் இரண்டு நாடுகளினதும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டதாக ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை மலேஷியாவுக்கிடையேயான தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

மலேசிய நேரப்படி இன்று பிற்பகல் 2.10 அளவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோலாலம்பூர் சர்வதேச வானுர்தி தளத்தை சென்றடைந்தார்.

மலேசிய அரசாங்கத்தின் சார்பில் அந்தநாட்டின் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் Dato Sri Richard Riot Anak Jaem உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியை வரவேற்றனர்.

இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு மலேஷிய சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அந்த நாட்டின் மன்னர் சுல்தான் மொஹமட் பிரதமர் நஜீப் ரசாக் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.