சைபிரஸ் நாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மருதனை பிரதேசத்தில் வைத்து காவற்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள காவற்துறை நிலையங்களில் இருந்து கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
தொழில் பெற்று தருவதாக கூறி அவர் சுமார் 12 பேரிடம் நிதி மோசடி செய்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.