பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி ; யாழ் மாநகர முதல்வர் மீது வழக்குத் தாக்கல்

296 0

பொத்துவில் தொடக்கி பொலிகண்டிவரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமையால் நீதிமன்ற கட்டளையை மீறியதாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக மன்னார் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக மன்னார் பொலிஸ் நிலையத்தால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அறிக்கை ஊடாக பேரணியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், வி.மணிவண்ணன் மட்டுமே பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பதில் நீதிவான் முன்னிலையில் இன்று (15.02.2021) விசாரணைக்கு எடுக்கப்பட்டு தவணையிடப்பட்டது.