தமிழ் பாடசாலை ஒன்றில் விசமிகள் அட்டகாசம்!

225 0

ஹட்டன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் தமிழ் மகா வித்தியாலயத்தில் பெற்றோர்களால் அமைக்கப்பட்ட விளையாட்டு வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.

நாளை நாடளாவிய ரீதியல் உள்ள பாடசாலைகளில் தரம் – 1க்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு இடம்பெற விருக்கின்ற நிலையில் பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் – 1 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்விற்காக கட்டப்பட்ட விளையாட்டு வீட்டுக்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை சம்பவத்தினை அறிந்த டின்சின் பிரதேசமக்கள் பாடசாலையில் ஒன்று கூடியுள்ளனர்.

இந்த விளையாட்டு வீட்டுக்கு தீ வைத்து கொழுத்திய சந்தேகநபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

நாளைய தினம் எமது பாடசாலையில் தரம் 01க்கு மாணவர்கைளை உள்வாங்குவதற்கான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த நிலையில் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வீட்டினை அமைத்தோம்.

ஆனால் எமது பாடசாலைக்கு வருகைதந்துள்ள புதிய அதிபரின் தனிபட்ட கோபணனமாக இந்த விளையாட்டு வீட்டுக்கு தீவைத்துள்ளனர்.

இதற்கு யார் தீ வைத்தனர் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவகின்றனர்.