நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3,880 பேர் கைது

220 0

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,572 பேரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 518 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.