கொட்டகலை பிரதேசத்தில் கொரொனா தொற்றால் ஒருவர் மரணம்..!

208 0

சிறிலங்காவில் மேலும் 5 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியமையை அடுத்து கொவிட் 19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 384 ஆக உயர்வடைந்துள்ளன.

கொட்டகலை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொட்டகலை வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா காரணமாக அவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மத்துகமை பகுதியை சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவருக்கு அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பின்னர், அவர் அநுராதபுரம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா, சிறுநீரக பாதிப்பு நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.

அதன்பின்னர் அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்19 தொற்றால் மோசமடைந்த நீரிழிவு நோய் நிலைமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 8 பகுதியை சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர் வெலிசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா மற்றும் சுவாசத்தொகுதி செயலிழந்தமை காரணமான அவர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவர் வெலிசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா, நுரையீரல் நோய் நிலை காரணமாக அவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.