கிண்ணியாவில் வயல் காணியில் இருந்து கைக்குண்டு கண்டெடுப்பு

285 0

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஜித்நகர், கல்பத்த, வெள்ளாங்குளப் பிரதேச வயல் காணிக்குள் கைக்குண்டு ஒன்று இன்று (12) கண்டெடுக்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் புலனாய்வு விஷேட பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் சென்ற பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கைக்குண்டு புலிகளின் காலத்தில் புலிகளால் பாவிக்கமுற்பட்டு கைவிடப்பட்டதாக இருக்கலாம் என் கிண்ணியா பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட கைகுண்டு தொடர்பாக திருகோணமலை நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப் படையினர் கைக்குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை நாளை இடம்பெறும் என கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.