றொபின் வறிய மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்ட ”ஆங்கில டிப்ளோமா”!

219 0

நேற்று(10) கிளிநொச்சியில் க.பொ.த உயர் தர பரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் 25 மாணவர்களுக்கு ஆங்கில டிப்ளோமா வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

றொபின் வறிய மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டடத்தின் நிதிப் பங்களிப்பு டன் இவ் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. அத்தோடு இவ்வருடம் க.பொ.த உயர் தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இந்நிதியம் வடமாகாணத்தில் பல சேவைகளை ஆற்றி வருகின்றது.