இலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா

238 0

இலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல்  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72,710 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 567 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறிய நிலையில் மொத்தமாக 66,211 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 375 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.