கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் –மஹிந்த

200 0

கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதி வழங்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்று நீர்வழியாக பரவாது என நேற்றைய அமர்வின்போது, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டும் என கூறினார்.