வெடிப்பொருள்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

253 0

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், டெடனேட்டர் 04 உள்ளிட்ட வெடிப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் மூவர் இறக்குவானை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் மஹபன்னில மற்றும் இறக்குவானை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.