கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 245 பேருக்கு தொற்று

217 0

சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் தொற்று உறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 245 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதவிர கம்பஹா மாவட்டத்தில் 214 பேருக்கும் இரத்தினப்புரியில் 53 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

சிறிலங்காவின் ஏனைய மாவட்டங்களில் 260 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் இலங்கையில் மொத்தமாக 772  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.