சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

233 0

சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறிலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68ஆயிரத்து 938ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 807 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 63ஆயிரத்து 401 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 186 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் இதுவரை 351 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.