யாழ். பல்கலை முன்றலில் எழுச்சிப் பேரணி

266 0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் பொலிகண்டி நோக்கிச் செல்கிறது.

இந்நிலையில், குறித்த பேரணி தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலை அடைந்துள்ளது.

இதன்போது, நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்காலில் சேகரிக்கப்பட்ட மண், யாழ். பல்கலைக்கழக ஒன்றியத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மண், யாழ். பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிட மீள் கட்டுமானத்தில் நேர்ப்பதற்காக எடுத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பேரெழுச்சிப் பேரணி நல்லூர் நோக்கி நகரவுள்ளது.