ஆசிரியர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

208 0

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கிட்ட நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த 30 வயதையுடைய பொ.பி.ஜெனிற்ரன் பாடசாலையென்றில் ஆரம்பப் பிரிவில் கடமையாற்றிவந்த ஆங்கில ஆசிரியரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரியின் குடும்பத்தகராரிக்கு இவரின் பிரிவால் விடிவுகிடைக்கும் எனும் எண்ணப்பாட்டின் அடிப்படையில் கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்தமை விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது.