யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (07) முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அரியாலையை ச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (வயது-42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.