வவுனியாவில் தீயில் எரிந்த பெண் சிகிச்சை பலனின்றி மரணம்!

275 0

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இந்தப் பெண் கடந்தவாரம் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவத்தில் அமல உட்பவம் (வயது- 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.