ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் இவ்விரு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்கம, ரூபிவள பகுதியில் உள்ள ஒரு வீடு ஒன்றில் தனிமையில் குடியிருந்து பெண்ணொருவர் இரத்தக் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
75 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரத்கம கோவில வத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு மரணங்கள் தொடர்பிலும் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.