யாழ்ப்பாணத்தை நோக்கி விரைந்து வரும் தமிழரின் உரிமை பேரெழுச்சி பேரணி (காணொளி )

271 0

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான நடை பயணத்தின் 5ஆம் நாள், கிளிநொச்சி டிப்போச் சந்தியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து ஆரம்பமான நடைபயணம் பரந்தன், இயக்கச்சி, பளை, கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ். நகரம், யாழ். பொதுநூலகம், யாழ் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்.

யாழ். பல்கலைக்கழகம். நல்லூர் திலீபன் நினைவிடம், கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி, வல்லைவெளி. புறாபொறுக்கிச் சந்தி, நெல்லியடி, வதிரிச்சந்தி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை தீருவில்வெளி, வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக பொலிகண்டியை அடையவுள்ளது.