பொலிஸார் என தெரிவித்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்

217 0

கொழும்பு தீர்க்கப்படாத குற்றப் பிரிவின் அதிகாரிகளான தம்மை அடையாளப்படுத்தி விசாரணைக்காக வந்ததாக கூறி கடந்த 03 ஆம் திகதி வீடொன்றிற்கு சென்ற குழுவினர் அங்கு கொள்ளையிட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் சுமார் 5 இலட்சம் ரூபாய் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கட்டுகஸ்தொட பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு வருகை தந்த 4 பேர் குறித்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.