கேகாலை டிப்போ ஊழியர்கள் இருவருக்கு கொரோனா

207 0

கேகாலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ ஊழியர்கள் 50 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், நோய் அறிகுறிகள் காணப்பட்ட கேகாலை பொலிஸின் போக்குவரத்து பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.