எழுச்சி பேரணியில் கலந்துகொண்ட சிவாஜிலிங்கத்தின் வாகனம் மீது தாக்குதல்

216 0

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டுள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாவது

திருகோணமலை மடத்தடி சந்தியிலேயே வைத்து நானும் அனந்திசசிதரனும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தின் மீது காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

அவர்களுடைய கைகளிலே பெட்ரோல் நிரப்பிய போத்தல்கள் காணப்பட்டன,பொலிஸார் பக்கத்திலே நிற்கின்ற போதுதான் இந்த தாக்குதல் இடம்பெற்றது.விழவிழ எழுவோம் வீறுகொண்டு எழுவோம் என்ற அடிப்படையிலே நாங்கள் இந்த பயணத்தை நிச்சயமாக தொடர்வோம்.

இனவெறி மதவெறி தாக்குதல்களிற்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்,